பல்லவி
எந்தனுசு ஸைரிந்துனு ஸீதா காந்து த3ய ராது3
அனுபல்லவி
1(முனி) சிந்தனீய ஸ்ரீ ராம சந்த்3ர நா
செந்த ரானிங்க மனஸு ராதா3 (எந்த)
சரணம்
சரணம் 1
2ஸம ரஹிதாஸமான நே தா3ஸு-
டா3ஸமான பாலன நா மொரலு
வேஸமாயெனா ஸுஜனாவன ஸு1ப4
கரமாப்த பரிவாராமர வினுத
ரமா ரமணயிதரமா நீகு நே(னெந்த)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்த/-அனுசு/ ஸைரிந்துனு/ ஸீதா/ காந்து/ த3ய/ ராது3/
எவ்வளவு/ என்று/ தாளுவேன்/ சீதை/ கேள்வனின்/ தயை/ வாராது/
அனுபல்லவி
(முனி)/ சிந்தனீய/ ஸ்ரீ ராம சந்த்3ர/ நா/
முனிவரால்/ சிந்திக்கப்படுவோனே/ ஸ்ரீ ராம சந்திரா/ எனது/
செந்த/ ரானு/-இங்க/ மனஸு/ ராதா3/ (எந்த)
அருகில்/ வர/ இன்னமும்/ மனது/ வாராதோ/
சரணம்
சரணம் 1
ஸம/ ரஹித/-அஸமான/ நே/ தா3ஸுட3/-
நிகர்/ அற்றோனே/ தனிப்பட்டோனே/ நான்/ (உனது) தொண்டன்/
அஸமான/ பாலன/ நா/ மொரலு/
நிகரற்றோனே/ பேணுவதில்/ எனது/ முறையீடுகள்/
வேஸமு/-ஆயெனா/ ஸுஜன/-அவன/ ஸு1ப4/
வேடம்/ ஆனதோ/ நல்லோரை/ காப்போனே/ மங்களம்/
கரமா/-ஆப்த/ பரிவார/-அமர/ வினுத/
அருள்வோனே/ இனியோர்/ சுற்றத்தோனே/ அமரரால்/ போற்றப் பெற்றோனே/
ரமா/ ரமண/-இதரமா/ நீகு/ நேனு/-(எந்த)
இலக்குமி/ மணாளா/ வேற்றோனா/ உனக்கு/ நான்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - (முனி) - இச்சொல் எல்லா புத்தகங்களிலும் bracket-களில் கொடுக்கப்பட்டுள்ளது.
2 - ஸம ரஹிதாஸமான - 'ஸம ரஹித' + 'அஸமான' - இவ்விரண்டு சொற்களுக்குமே 'நிகரற்ற' என்று பொருளாகும். ஒரே பொருளுடைய இவ்விரு சொற்கள் அடுத்தடுத்து வந்தாலும், வேறுவிதமாகப் பிரிக்க இயலாமையினால், முதற்சொல்லுக்கு 'நிகரற்ற' என்றும், அடுத்த சொல்லுக்கு, 'தனிப்பட்ட' என்றும் பொருள் கொள்ளப்பட்டது.
3 - வ்ரு2ஷப4 ராஜ-ப - சில புத்தகங்களில் இச்சொல்லுக்கு, 'நந்தி' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'வ்ரு2ஷப4 ராஜ' என்று மட்டுமிருந்தால் 'நந்தி' என்று பொருள் கொள்ளலாம். ஆனால், அடுத்து வரும் 'ப' என்ற சொல் 'தலைவன்' என பொருள்படுவதனால், 'நந்திக்குத் தலைவன்' (விடையேறும்) 'சிவன்' எனப் பொருள் கொள்ளப்பட்டது.
Top
4 - விராஜமான கவி ராஜ - சில புத்தகங்களில், இச்சொல்லுக்கு 'ஜடாயு' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'விராஜமான' என்ற சொல்லில் 'விராஜ' என்பது 'பறவையரசன்' என்ற பொருளில் 'ஜடாயு'வைக் குறிக்கலாம். ஆனால், 'விராஜமான' என்பது ஓரு சொல்லாகும். அதனிலிருந்து 'மான' என்பதனைத் தனியாகப் பிரிக்கமுடியாது. அடுத்து வரும் 'கவி ராஜ' என்ற சொல்லிலிருந்தும் 'விராஜ' என்று பிரித்து, 'ஜடாயு' என்று பொருள் கொள்ளலாம். ஆனால், அதற்குமுன் வரும் 'க' என்பதற்குப் பொருளேதுமில்லை. எனவே, 'விராஜமான கவி ராஜ' என்பது 'ஜடாயு'வைக் குறிக்காது.
தியாகராஜர், தனது 'நாராயண ஹரி' என்ற 'யமுனாகல்யாணி' ராக கீர்த்தனையில், 'கவீன' - 'கவி'+'இன' - 'கவிகளில் சிறந்தோன்' என 'வால்மீகி' முனிவரைக் குறிப்பிடுகின்றார். அங்ஙனமே, இங்கும், 'கவி ராஜ' என்ற சொல்லுக்கு 'வால்மீகி முனிவர்' என்று பொருள் கொள்ளப்பட்டது.
விடையேறுவோன் - சிவன்
ஒளிரும் கவியரசன் - வால்மீகி முனிவர்
இராசதத் தன்மை - இச்சைகளினால் உந்தப்பட்டவை
மலையரசன் - மந்தர மலை
அரவரசன் - சேடன்
Top